Posts Tagged ‘கல்வெட்டு’

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை-  தமிழக அரசியல்வாதிகள் புகுந்து குழப்புவது, நிலுவையில் கிடக்கும் வழக்குகள், ஆரிய-திராவிடக் கட்டுக் கதைகளில் முடிந்த நிலை! (4)

ஓகஸ்ட் 2, 2021

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை–  தமிழக அரசியல்வாதிகள் புகுந்து குழப்புவது, நிலுவையில் கிடக்கும் வழக்குகள், ஆரியதிராவிடக் கட்டுக் கதைகளில் முடிந்த நிலை! (4)

கல்வெட்டுத் துறையில் சிறப்பானவர் இல்லாதிருப்பது[1]: கல்வெட்டுத்துறையினர், வெளியே வராமல், காலத்தை ஓட்டி வந்தனர். தேசிய-அனைத்துலக மாநாடுகளில் கலந்து கொள்வது, ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பது என்றெல்லாம் அலுவலகங்களில் உட்கார்ந்திருந்தனர். தமிழகத்தில் உள்ளோர், அப்பதவிக்கு வர, போதிய படிப்பு, அனுபம் இல்லாதிருததால், அவர்கள் வேலைக்கு வர முடியவில்லை[2]. நீதிமன்ற வழக்குகள் இதை அப்பட்டமாக வெளிப் படுத்துகிறது[3]. “இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடந்தது. “கல்வெட்டுத்துறையில் ரொம்ப நாட்களாக வட இந்தியர்கள்தான் பெரிய பொறுப்பில் இருந்தனர். ஒரு கட்டத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த நாகராஜ் ராவ் என்பவர் முக்கிய பொறுப்புக்கு வந்தார். அதனால் பெரிய தகராறு எல்லாம் நடந்தது. தென் இந்தியாவில் இருந்து ஒருத்தர் வந்துட்டார் என வட நாட்டவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அது இன்றும் நீடிக்கிறது என்பதற்கு சான்றுதான் இப்போது கல்வெட்டுத்துறையில் அறிவித்திருக்கும் பணி இடங்கள். இவர் பதவிக் காலம் முடிந்த உடனே கல்வெட்டுக்கு என்று இருந்த மதிப்பு குறைந்து போனது,” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகள் குறித்து தமிழக அரசின் செயல்பாட்டை விவரித்தார். குங்குமம் இப்படியெல்லாம் கதை விட்டிருக்கிறது[4].

அரசியல் செய்வதால், திறமை வந்து விடாது: ‘‘தமிழக அரசைப் பொறுத்தவரை கல்வெட்டு, தொல்லியல் துறையில் அதீத அக்கறை கொண்டிருக்கிறது. 2010ல் கலைஞர் முதல்வராக இருந்த போது, தமிழ் கல்வெட்டுகள் எல்லாம் பதிப்பிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகனுடன் இணைந்து முழு முயற்சி எடுத்தார். அதற்காக கையெழுத்தும் போடப்பட்டது. அந்த நேரத்தில் அது கைகூடாமல் போனது. இப்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. கல்வெட்டுகளைப் பதிப்பிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்தால் நன்றாக இருக்கும். கல்வெட்டுத்துறையினை, தொல்லியல் துறையோடு இணைத்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் குறித்தான காப்பிகள் கொடுத்தால் கூட இங்கு நம் ஆட்களை நியமித்து பாதுகாத்து, பராமரித்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யலாம். தொல்லியல் மீது மிகுந்த கவனம் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசில், இப்போது நல்ல செயலர்களும், கல்வெட்டுகள் படிக்கத் தெரிந்த அமைச்சரும் இருக்கின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் ஜால்றா அடிப்பதால் திறமை வந்து விடாது: “அமைச்சர் தங்கம் தென்னரசு கல்வெட்டுகளை நன்றாகவே படிப்பார். அத்துடன் அறிவியல்பூர்வமாகக் கொண்டு வர ஆசைப்படும் உதயசந்திரனின் செயல்பாடுகள் இன்னும் ஊக்கமாக இருக்கிறது. அவர் போட்ட அடிப்படை இன்று நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது...” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுகளின் தேவை குறித்தும் பேசினார். “இந்தியாவின் உண்மை வரலாற்றை எழுதக்கூடிய அலுவலகம் இது. இப்போது கேட்பது தமிழ் கல்வெட்டுகளுக்கு மட்டும் பணி நியமனம் அல்ல, சமஸ்கிருத கல்வெட்டுக்கும்தான். அதையும் வாசிக்க, பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இந்திய வரலாறு முழுமையடையும். மண்ணுக்கு அடியில் இருப்பது நமக்கு எப்படித் தெரியும்..? எல்லாமே கல்வெட்டுகள் மூலமாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இன்று இத்துறையில் இருக்கும் பலருக்கு கல்வெட்டைப் பெரிதாக படிக்கத் தெரியாது. இதற்காக அரசைக் குறை சொல்லவில்லை. துறையில் இருப்பவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்களை நியமித்துவிடுகிறார்கள். இது மாற வேண்டும். அதே வேளையில் கல்வெட்டுகளின் முக்கியத்துவம் குறித்து கலாசார விழிப்புணர்வுத் திட்டங்கள் நடத்தப்பட வேண்டும்…” என்று அழுத்தமாக முடித்தார் அந்த அதிகாரி.

இன்று இத்துறையில் இருக்கும் பலருக்கு கல்வெட்டைப் பெரிதாக படிக்கத் தெரியாது: பளிச்சென்று நடுவில் சொன்ன உண்மை இதுதான். மற்றும், “இப்போது கேட்பது தமிழ் கல்வெட்டுகளுக்கு மட்டும் பணி நியமனம் அல்ல, சமஸ்கிருத கல்வெட்டுக்கும்தான். அதையும் வாசிக்க, பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இந்திய வரலாறு முழுமையடையும்,” இதை திராவிடத்துவ வாதிகள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?  சமஸ்கிருத கல்வெட்டுகளை யார் படிப்பார்கள், “அதையும் வாசிக்க, பாதுகாக்க வேண்டும்,” என்றால் யார் செய்வது? பாவம், ஏதோ போகிற போக்கில், இத்தகைய உண்மையினையும் சொல்லி விட்டார் போலும். குங்குமம் படிப்பவர்களும், இதையெல்லாம் உன்னிப்பாக யாரும் படிக்கப் போவதில்லை.  வெங்கடேசன், மாறன் போன்றோர் ஏற்கெனவே புலம்பி இருக்கிறார்கள். ஆனால், அவை  அவை நடவடிக்கைகளில் பதிவாகாது என்று சொல்லி விட்டார்கள். இருப்பினும், இங்கு ஏதோ சாதித்து விட்டது போல, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரிய-திராவிடக் கட்டுக் கதைகள் கல்வெட்டுகள் படிக்க உதவாது: சமஸ்கிருதம்-தமிழ் என்று வைத்துக் கொண்டு திரிபுவாதம் செய்து கொண்டிருந்தால், கல்வெட்டியலில் ஒன்றையும் சாதிக்க முடியாது. தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் கூட, இந்த இரு மொழிகளும் தெரியாமல், கல்வெட்டுகளும் படிக்க முடியாது, ஆராய்ச்சியும் செய்ய முடியாது. பிரம்மி, தமிழ் பிரம்மி, தமிழி என்றெல்லாம் பேசினாலோ, சொற்பொழிவுகள் நடத்தினாலோ, வரிவடிவம் மாறப் போவதில்லை. நெட்டெழுத்தோ, வட்டெழுத்தோ, கிரந்தம் வரும் போதும், சமஸ்கிருதம் தெரிந்தே ஆகவேண்டும். ஆகவே, தங்கம் தென்னரசு நன்றாக கல்வெட்டுகள் படிப்பார் என்று மெச்சிக் கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. திராவிட பாணியில், மேடை பேச்சுகள் பேசுவதற்கு உபயோகப் படலாம், நடைமுறையில் ஒன்றையும் சாதித்து விடமுடியாது. அதே போலத்தான், “ஆரிய-திராவிடக் கட்டுக்கதைகள்,” ஏனெனில், சரித்திராசிரியர்கள் அவற்றை ஒதுக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள். ஆனால், நாங்கள் அதை வைத்து தான் ஆராய்ச்சி செய்வோம் என்றால், உலகத்தில் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. குண்டுசட்டியில் குதிரை ஓட்டி, சந்தோசமாக இன்னொரு 50-100 ஆண்டுகள் கூட கழித்து விடலாம்.

நிலுவையில் உள்ள வழக்குகள் ASI மற்ற அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்?: மேலே குறிப்பிட்ட வழக்குகள் எல்லாமே “சதாய்ப்பு வழக்குகள்” (harassment PILs, petitions) போன்றவை என்று தெரிந்து கொள்ளலாம். ஏற்கெனவே, ஒரே மாதிரியான வழக்குகள் இருக்கும் போது, எப்படி, மேலும்-மேலும் அதே வகையிலான வழக்குகள் ஏற்றுக் கொள்ளப் பட்டன என்பதை கவனிக்க வேண்டும். பல்லாவரம் பிரச்சினை ஆபாத்தான விசயம். ஏற்கெனவே பல்லாவர மலையில், பல்லவர்களின் குகைக் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, அவற்றை முழுவதுமாக மாற்றி தர்கா, கட்டிடங்கள் என்று முஸ்லிம்கள் மாற்றி விட்டனர். அங்கிருந்த சிலைகள், கல்வெட்டுகள் எல்லாமே காணாமல் போய்விட்டன. இதைப் பற்றி, இதுவரை எந்த பொறுப்பான, யோக்கியமான அகழ்வாய்வு நிபுணாரோ, நேர்மையான தொல்துறை வல்லுனரோ, தமிழ் அபிமானியோ, திராவிடத் தலைவரோ என்றும் பேசியதில்லை. பதாகை ஏந்தவில்லை, போராடவில்லை. இப்பொழுதும், ASI மற்ற அதிகாரிகள் சென்ற போது, பாதுகாப்பிற்கு யாரும் வரவில்லை. போலீஸாருக்கு புகைக் கொடுத்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. நீதிமன்றமும், மேற்கொண்டு என்னவாயிற்று என்று கேட்கவில்லை. இந்த விகடன், குங்குமம், கலைஞர் செய்தி, நக்கீரன் முதலியவை ஆராய்ந்து, தொல்துறை அதிகாரிகளை ரகசியமாக விசாரித்து, செய்திகளை வெளியிடவில்லை.

© வேதபிரகாஷ்

02-08-2021 .


[1]  குங்குமம், கல்வெட்டு அரசியல்!, அன்னம் அரசு, 04 Jul 2021

[2] Madras High Court – Dr. S. Rajavelu vs Chairman, Union Public Service … on 7 October, 2005

Author: N Kannadasan; Bench: P Misra, N Kannadasan; JUDGMENT N. Kannadasan, J. https://indiankanoon.org/doc/128349221/

[3] Supreme Court of India – Sanjay Kumar Manjul vs The Chairman, Upsc And Ors on 13 September, 2006; Author: S.B. Sinha

Bench: S.B. Sinha, Dalveer Bhandari;   CASE NO.:  Appeal (civil)  4098 of 2006

PETITIONER:  Sanjay Kumar Manjul      versus  RESPONDENT:  The Chairman, UPSC and Ors.                   

DATE OF JUDGMENT: 13/09/2006;  https://indiankanoon.org/doc/1577105/

[4] http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=18238&id1=4&issue=20210704.

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை- 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! தமிழக அரசியல்வாதிகள் புகுந்து குழப்புவது (3)

ஓகஸ்ட் 2, 2021

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை– 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! தமிழக அரசியல்வாதிகள் புகுந்து குழப்புவது (3)

2019ல் வழக்கு செப்டம்பர்மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், பாதுகாப்பு: “சமீபத்தில் மைசூருவில் உள்ள கல்வெட்டுத்துறை அலுவலகத்தை மற்றொரு இடத்திற்கு மாற்றியபோது, தமிழ் கலவெட்டு படிமங்கள் பெரும்பாலானவை சேதமடைந்தன[1]. அவற்றை புத்தக வடிவிற்கு மாற்றி, டிஜிட்டல் மயமாக்கி பாதுகாத்து இருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர்[2]. இதனால் தமிழர்களின் வரலாறு, எதிர்கால தலைமுறையினருக்கு தெரியாமல் அழிந்து விடும். எனவே தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழக தொல்லியல் துறை வசம் ஒப்படைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும். தமிழக  கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மைசூரில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழகத்துக்கு மாற்ற  தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது[3]. இதனை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம்,  தாரணி அமர்வு,  தமிழக  கல்வெட்டு படிமங்களை பாதுகாக்கவும், படிக்கவும், அவற்றை பதிப்பிக்கவும் எடுத்துள்ள  நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல் துறை பதில்  அளிக்க  உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22, 2019 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்[4].

2018 ல் தொடர்ந்த வழக்கு – தமிழ் கல்வெட்டு படிகள் பாதுகாப்பாக உள்ளன : ”மத்திய தொல்லியல் துறையின், மைசூரு அலுவலகத்தில் உள்ள, தமிழ் கல்வெட்டு படிகள், வெளிப்படை தன்மையுடன் பாதுகாக்கப்படுகின்றன; ஆவணங்கள் ஏதும் சிதைக்கப்படவில்லை,” என, அதன் இயக்குனர், முனிரத்தினம் தெரிவித்துள்ளார். மத்திய தொல்லியல் துறையின், தென்னிந்திய அலுவலகம் மைசூரில் உள்ளது. அங்குள்ள, கல்வெட்டு துறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சமஸ்கிருத கல்வெட்டு ஆவணங்கள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்து புகார் எழுந்தது[5]. இது குறித்து, அந்நிறுவனத்தின் கல்வெட்டியல் துறை இயக்குனர், முனிரத்தினம் கூறியதாவது: “மைசூரு கல்வெட்டுப் பிரிவில் உள்ள, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி கல்வெட்டு ஆவணங்களும், உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. இங்குள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு ஆவணங்களை சரிபார்த்து, பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும், இங்கு வந்து ஆவணங்களை பார்த்து, ஆராய்ந்து செல்கின்றனர். மத்திய அரசின் நிறுவனமான, மத்திய தொல்லியல் துறை, இந்திய மொழிகளின் ஆவணங்களை சிதைத்து, நாட்டின் ஒற்றுமையை ஒரு போதும் கெடுக்காது,” இவ்வாறு அவர் கூறினார்[6].

வெங்கடேசனின் டுவிட்டர் கடிதம் வைத்து கதை விடும் குங்குமம்[7]: இந்திய தொல்லியல் துறையின் கீழ் உருவாக்கப்படவுள்ள 758 புதிய பணியிடங்கள் குறித்தும், இந்தியக் கல்வெட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் குறிப்பிட்டும் இந்தியக் கலாசாரத்துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் எழுதிய கடிதம்தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாக் என்று கதையை ஆரம்பிக்கிறது குங்குமம்[8]. அந்தக் கடிதத்தில், “இந்திய வரலாற்றிற்குப் பேருதவி புரியும் கல்வெட்டுத்துறையில் குறைந்தது 40 தொழில்நுட்ப பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களைப் புதிதாக நியமியுங்கள்; குறைந்த அளவாக ஒரு மொழிக்கு 2 பேரையாவது நியமனம் செய்யுங்கள்,…” என சு.வெங்கடேசன் வலியுறுத்தி இருந்தார். தவிர, “இந்தியா முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 80,000 மேலான கல்வெட்டுகளில் 50% இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பதை மீண்டும் கவனப்படுத்துகிறேன்…” என்றும் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால், அரைகுறையாக கடிதம் எழுதி, டுவிட்டரில் வெளியிட்ட்தற்கு, அமைச்சர் முறையாக பதில் அளித்து விட்டார்.

பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைப்பது: இதுகுறித்து கல்வெட்டுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஓர் அதிகாரியிடம் பேசினோம். ஓய்வுபெற்ற அவர் தன்னுடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. ‘‘கற்பாறைகள், தூண்கள், கோயிற்சுவர்கள், செப்பேடுகள், காசுகள், கற்கள், உலோகங்கள், பானைகள், மரங்கள், ஓலைச்சுவடிகள், துணிகள், சங்குகள் மற்றும் ஓவியங்கள் மீதான எழுத்துப்பதிவுகள் பற்றிய ஆய்வை கல்வெட்டியல் என்கிறோம். இது திராவிடம், சமஸ்கிருதம் என்று இரு பிரிவுகளாகத்தான் இருக்கும். அந்த இரு பிரிவுக்கும் ஒரே ஒரு இயக்குனர்தான். இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் 60% இருக்கின்றன. இதில் தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கைதான் அதிகம். தொல்லியல் துறையின் கீழ் 758 புதிய பணியிடங்களில், கல்வெட்டு துறைக்கென்று 99 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இது மிக மிகக் குறைவானது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள ஒவ்வொரு மொழிக்கும் அதன் விகிதாசார அடிப்படையில் கல்வெட்டு கண்காணிப்பாளர், துணை கல்வெட்டு கண்காணிப்பாளர், உதவி கல்வெட்டு கண்கணிப்பாளர், கல்வெட்டு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்துப் பேசுவது தான் வெளிப்படுகிறது.

துறை ஆரம்பித்த கதை சொல்லும் விதம்: அதிலும் அதிகமாக இருக்கும் தமிழ் கல்வெட்டுகளைப் படித்து, டிஜிட்டல் ஆக்குவதற்கு கூடுதலாக பணி நியமனம் செய்ய வேண்டும்…” என்கிற அந்த அதிகாரி, ‘‘1916லிருந்து 2020 வரைக்குமான கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை…” என்கிறார்.  ‘‘இதுபோக ஏற்கனவே இருக்கும் கல்வெட்டுகளின் காகிதப்பதிவுகள் பலவீனமடைந்து வருகின்றன. அதனால் 74 ஆயிரம் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை உடனே செய்ய வேண்டும்…” என்று அரசுக்கு கோரிக்கை வைக்கும் அந்த அதிகாரி, இந்தியாவில் கல்வெட்டுத் துறை குறித்தான  வரலாற்றைப் பகிர்ந்தார். “இந்தியாவில் ஆங்கில அரசால் 1860ல் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. இதிலிருந்து பிரிந்து 1886ல் தனியாக கல்வெட்டு துறை உருவானது. வட இந்தியாவிற்கு அலெக்சாண்டர் கன்னிங்காமும் தென் இந்தியாவிற்கு ஜெர்மன் ஆய்வாளரான ஹல்ட்ஸ்ச்சும் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். தஞ்சை பெரிய கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளை வெளியிட்டவர் ஹல்ட்ஸ்ச். 1887லிருந்து இதுவரை இந்தியா முழுக்க 85,000 – 90,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் கல்வெட்டுகள் 45 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இதற்கடுத்து கன்னடத்தில் 10 ஆயிரம், தெலுங்கில் 8 ஆயிரம், சமஸ்கிருதத்தில் 5,000 – 8,000 கல்வெட்டுகள் இருக்கும். இனிவரும் காலங்களிலும் கல்வெட்டுகள்  கண்டெடுக்கப்பட வேண்டியுள்ளது.

ஆங்கிலேயர் ஊட்டியில் வைத்திருந்தது மைசூருக்குச் சென்றது: “உலக அளவில் இந்தியாவில்தான் அதிக கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் குவாரி, சுரங்க வேலைகள் செய்யும்போது கல்வெட்டுகளைப் பாதுகாப்பதும் அவசியமானது. ஆரம்பத்தில் கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் அலுவலகம் சென்னையில் இயங்கியது. சென்னையில் வைத்திருந்தால் காலப்போக்கில் காகிதம் இற்றுப்போய்விடும் என்று, காலநிலை குளிர்ச்சியாக இருக்கும் ஊட்டிக்கு மாற்றப்பட்டது. 1968ல் மைசூர்காரர் ஒருவர் கல்வெட்டுத்துறையின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். பாதுகாப்பு அலுவலகத்தை அவர் இடத்துக்குக் கொண்டுபோய்விட்டார். அங்கேயும் காலநிலை மோசம் இல்லை. ஆனால், கன்னடம், தமிழ் பிரச்னைகள் இருந்தது,…” என்கிற அந்த அதிகாரி, கல்வெட்டுத் துறையில் வட இந்திய, தென் இந்திய அதிகாரிகளுக்கான பனிப்போர் குறித்தும் விளக்கினார்.

© வேதபிரகாஷ்

02-08-2021


[1] தினத்தந்தி, தமிழக கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? மத்திய தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி, செப்டம்பர் 26, 2019, 05:15 AM

[2] https://www.dailythanthi.com/amp/News/Districts/2019/09/26004106/What-are-the-steps-taken-to-preserve-the-inscriptions.vpf

[3] தினத்தந்தி, கல்வெட்டுகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?- உயர் நீதிமன்றம் கேள்வி, பதிவு : செப்டம்பர் 25, 2019, 05:09 PM.

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/25170950/1053188/What-are-the-measures-taken-to-protect-the-inscriptions.vpf.vpf

[5] தினமலர், தமிழ் கல்வெட்டு படிகள் பாதுகாப்பாக உள்ளன,  Added : பிப் 09, 2018  02:21.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=1955452

[7] குங்குமம், கல்வெட்டு அரசியல்!, அன்னம் அரசு, 04 Jul 2021

[8] http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=18238&id1=4&issue=20210704.

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை- 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! ஒப்பந்தமுறையில் ஆள்சேர்ப்பு வேண்டும் என்றால் சொல்லியிருக்கலாமே? (2)

ஓகஸ்ட் 2, 2021

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை– 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! ஒப்பந்தமுறையில் ஆள்சேர்ப்பு வேண்டும் என்றால் சொல்லியிருக்கலாமே? (2)

தேசிய அருங்காட்சியகத்தில் உரிய நிபுணர்கள் கிடைக்காததால் 92 காலியிடங்கள் நீக்கப் பட்டன: தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் படும் 2 லட்சத்திற்கு மேலாக உள்ள விலையுயர்ந்த பொருட்களை விளக்க 15 பேர் தான் உள்ளனர்.  ஜூலை 23, 2019 அன்று காலியிடங்களுக்கு திறமையான நிபுணர்கள் வராதலால், அவை காலாவடி ஆகியதாக அறிவித்து, நீக்கப் பட்டன[1]. தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லை என்று 2014 முதல் 2019 வரை ஐந்து வருடங்களாக நிரப்பப் படாமல் காலியாக இருந்தன. ஏனெனில், சரித்திரகாலத்திற்கு முந்தைய பொருட்கள், கையெழுத்துப் பிரதிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், தாமர பட்டயங்கள் முதலியவற்றை விளக்க, பாதுகாக்க யாரும் வரவில்லை[2]. அதனால், அவ்வாறு செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது[3]. அத்தகைய நிபுணத்துவம், வல்லமை, திறமை, கல்விதகுதி என்று எல்லாம் இருந்திருந்தால், ஏன் அந்த 92 காலியடங்களுக்கு தமிழர்கள் முறைப்படி விண்ணப்பித்து சேர்ந்திருக்கக் கூடாது?  குங்குமம், விகடன், நக்கீரன், கலைஞர் செய்தி என்றெல்லாம் ஊடகங்களில் பெருமை பேசுபவர்கள் ஏன் சேரவில்லை?

இளைஞர் அகழாய்வாய்வாளர் [Young Archaeologist (ASI-YA)] சேர்ப்பு என்று அறிவிக்கப் பட்டது: 27-07-2021 அன்று இளைஞர் அகழாய்வாய்வாளர் [Young Archaeologist (ASI-YA)] சேர்ப்பு பற்றி சுற்றறிக்கை விடப் பட்டது[4]. மாதம் ரூ 35,000/- என்று ஒப்பந்த முறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அறிக்கை வெளியிட்டது. இதையும், சிலர் சுட்டிக் காட்டி, அகழாய்விற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள், ஆனால், கல்வெட்டியல் துறைக்கு ஆள் சேர்ப்பதை தடுக்கிறார்கள் என்றேல்லாம் என்று சொல்வதாகட் தெரிகிறது. இருப்பினும், தமிழ் ஊடகங்களில் இவையெல்லாம் வெளிவரவில்லை. வெங்கடேசன் கடிதம் எழுதியது, தங்கம் தென்னரசு கல்வெட்டு படித்தது, கனிமொழி ஆய்வு செய்தது பற்றி தான் செய்திகள் வந்துள்ளன.  ஒருவேளை, இந்த வேலைக்கும் கல்வெட்டு நிபுணத்துவ இளைஞர்கள் விரும்பினால், அவர்களுக்கும் அதுபோல வேலை கொடுக்க, பெரியவர்கள் பதாகை ஏந்தலாம், போராடலாம், ஏன் மோடிக்கு கடிதம் கூட எழுதலாம். ஆனால், செய்யவில்லை. ஊடகங்களில் தற்பெருமை செய்திகளை வெளியிட்டு,  அது-இது-எது பாணியில் ஆரிய-திராவிட கட்டுக் கதைகளுக்கு வந்து, ஆர்பாட்டங்கள் செய்வதில் முடிந்துள்ளன.

டிசம்பர் 2020 – ‘இந்தியாவில், எத்தனை கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் எந்த மொழியில் அதிக கல்வெட்டுகள் உள்ளன: என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தர விட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், இளஞ்செழியன் தாக்கல் செய்த பொதுநல மனு: “மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வகப் பிரிவு, மைசூரில் உள்ளது.தமிழக அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட, 90 சதவீத கல்வெட்டுகள் மற்றும் அவற்றின் நகல் எடுக்கப்பட்ட படிகள், அங்கு உள்ளன.அவை, முறையாக பராமரிக்கப்படவில்லை. அவை சேதமடைந்து, அழியும் நிலையில் உள்ளன. அங்கு சென்று, தமிழக தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய இயலவில்லை. மைசூரில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் அவற்றின் நகல் படிகளை, தமிழகத்திற்கு கொண்டு வந்து பராமரிக்க, நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்[5]. நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வு விசாரித்தது. மத்திய அரசுத் தரப்பு, ‘இவை, முதலில் ஊட்டியில் பாதுகாக்கப்பட்டன. தட்பவெப்ப நிலை கருதி, மைசூருக்கு மாற்றப்பட்டன. அங்கு பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தது[6].

கட்டமைப்பு வசதிநீதிபதிகள் உத்தரவு: இந்தியாவில், எத்தனை கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் எந்தெந்த மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. எந்த மொழியில், அதிக கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மைசூரில் உள்ளவற்றில், எத்தனை சேதம் அடைந்துள்ளன. மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வகப் பிரிவின் கிளையை, தமிழகத்தில் ஏற்படுத்தினால் என்ன?மைசூரில் உள்ள பொருட்களை தமிழகத்திற்கு மாற்றி பாதுகாக்க வாய்ப்புள்ளதா, அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தி தர சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து, மத்திய, மாநில தொல்லியல் துறைகள், டிச., 10, 2020ல் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2019 – பிப்ரவரியில் ஒரு வழக்கு: 16—02-2019 அன்று மதுரை உயர்நீதிமன்றமும் தமிழின் தொன்மைக்குச் சான்றாக இருக்கும் சமணர்காலக் கல்வெட்டுகளைப் பாதுகாக்கத் தொல்லியல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை தொல்லியல் துறைக்குக் கேள்வி எழுப்பியுள்ளது[7]. விகடனின் செய்தி, செய்தியாக இல்லை, ஏதோ தீர்ப்பு கொடுக்கும் தோரணையில் உள்ளது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட வாதங்கள், ஆவணங்கள் பற்றி சொல்லாமல், “மத்திய அரசு, வடநாட்டுத் தொன்மையை வெளிப்படுத்த முயற்சிக்கும் அளவுக்குத் தமிழகத்தின் தொன்மையை வெளிப்படுத்துவதில் போதிய அக்கறையின்றியே செயல்பட்டுவருகிறதுஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல் என்று பல்வேறு அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு போதிய முக்கியத்துவத்தை எப்போதுமே அளித்ததில்லை. பாதுகாக்க வேண்டிய முக்கிய சின்னங்களான சமணர் படுகைகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளுக்கும் இதே நிலைமை தான்.” இவ்வாறு ஏதோ குடுமிப்பிடி சண்டையை மூட்டிவிடுவது போலிருக்கிறது[8].

2019 ஆகஸ்டில் தொடர்ந்த வழக்கு: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஆறு வார்டுகளில் உள்ள 59 ஏக்கர் நிலம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ கூடாது என தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று (07.08.2019) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், பல்லாவரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை சுற்றி வேலி அமைப்பதற்காக தொல்லியல் துறையினரும், வேலையாட்களும் சென்றபோது அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என வாதிட்டார். இதையடுத்து, அகழ்வாராய்ச்சி செய்வதற்காக குறிப்பிட்ட அந்த பகுதிகளில் வேலி அமைக்க பாதுகாப்பு வழங்கும்படி, நீதிபதி கிருபாகரன் பரங்கிமலை டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார். பின்னர், இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழில் உள்ளதால் தமிழ்மொழி தெரிந்த கூடுதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களை ஏன் நியமிக்க கூடாது எனக் கேள்வி எழுப்பினார்[9]. மேலும், கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் சென்னையில் அமைக்க கூடாது எனவும், அனைத்து தமிழ் கல்வெட்டுகளையும் ஏன் சென்னைக்கு மாற்றக்கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்கு வரும் 25ம் தேதிக்குள் பதில் அளிக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்[10].

© வேதபிரகாஷ்

02-08-2021


[1] The museum issued its office order on July 23, 2019 announcing that the group A, B and C posts stand abolished, following a ministry of culture order[1]. A museum source informed that of the 92 posts, up to 50 were group A and B — functional and technical staff.

[2] Times of India, National Museum in Delhi abolishes 92 vacant posts, Manimugdha S Sharma / TNN / Updated: Jul 26, 2019, 08:58 IST.

[3] https://timesofindia.indiatimes.com/city/delhi/national-museum-abolishes-92-vacant-posts/articleshow/70386889.cms

[4] Circular No.A.44/27/2021-ADMN-I, Government of India, Ministry of Culture, Archaeological Survey of India dated 27-07-2021

[5] தினமலர், எந்த மொழியில் அதிக கல்வெட்டுகள்? அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!,  Added : டிச 03, 2020  00:44.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2663841

[7] விகடன், அழியும் தமிழின் தொன்மையைப் பாதுகாக்க மறுப்பது ஏன்? – நீதிமன்றத்தின் கேள்விக்குப் பின் இருக்கும் நியாயங்கள், சி.வெற்றிவேல், Published:17 Feb 2019 8 AM; Updated:17 Feb 2019 8 AM.

[8] https://www.vikatan.com/spiritual/miscellaneous/149917-extinct-of-tamil-jain-beds-and-tamil-bhrami-inscriptions

[9] கலைஞர்.செய்தி, கல்வெட்டு ஆராய்ச்சி மைய கிளையை ஏன் சென்னையில் அமைக்கக் கூடாதுசென்னை உயர் நீதிமன்றம் கேள்வி, 10:08:35 pm – Sep 07, 2019.

[10] https://m.kalaignarseithigal.com/article/tamilnadu/chennai-high-court-questioned-why-should-not-set-epigraphical-research-center-in/c464f1d9-030f-4950-827a-ce9702560b9a

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை- 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! (1)

ஓகஸ்ட் 2, 2021

கல்வெட்டியல், கல்வெட்டு நிபுணர், போராடும் பிரச்சினை– 2013லிருந்து பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைத்து தொல்துறையினர் ஆர்பாட்டம் செய்வது! (1)

கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை: மத்திய தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டு ஆய்வாளர்கள், 15-07-2021, அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய தொல்லியல் துறையின் கீழ், பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. தென் மாநிலங்களுக்கு, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பிராந்திய அலுவலகம், தலைமையிடமாக உள்ளது. சென்னை உள்ளிட்ட இடங்களில், இதற்கு வட்டார அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், கல்வெட்டு ஆய்வுப் பிரிவு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த பிரிவு தான், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தை, கல்வெட்டுகளின் வாயிலாக படித்து, வரலாறாக பதிவு செய்கிறது. இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை, தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை[1]. இதை கண்டிக்கும் வகையில், சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள, மத்திய தொல்லியல் துறையின், வட்டார அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் உள்ள கல்வெட்டு துறையினர், அமைதியான முறையில், கையில் பதாகைகளை ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[2].

ஒப்பந்த முறையில் வேலை வேண்டும் என்றால், அதை வெளிப்படையாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்: மத்திய தொல்லியல் துறை, தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், கல்வெட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை உருவாக்கவோ, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது பொய். கீழே விளக்கியுள்ளப் படி, ஒப்பந்த முறையில் கல்வெட்டுத் துறைக்கும் ஒரு ஆண்டிற்கு ஆள் எடுக்க வேண்டும் என்றால், சொல்லியிருக்கலாம், இப்பொழுதும், அவ்வாறு செய்வது சுலபமே. பிறகு அதற்கு போராடாமல், திசைத் திருப்பும் அவசியம் தேவையில்லை. ரூ 35,000/- வாங்கிக் கொண்டு, ஓராண்டு வேலைசெய்ய தயார் என்றால், தாராளமாக விண்ணப்பித்து, வேலைக்கு போகலாம். யாரும் தடுக்கப் போவதில்லை. ஆகவே, கல்வெட்டு நிபுணர்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பதை, அனுபவஸ்தர்கள் ஒழுங்காக தெரிவிக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லியதைக் கேட்டு, பதாகை ஏந்துவதால், எந்த பிரயோஜனமும் இல்லை.

தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் உண்மையினை மறைத்து பேசியது: ‘பிரதமரே, கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையை கையில் பிடித்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, பல மூத்த வரலாற்று ஆய்வாளர்களும், கல்வெட்டியல் அறிஞர்களும், சமூக வலைதளங்களில் வெளியிடத் துவங்கியது, பரபரப்பை கிளப்பியது[3]. எதற்காக இந்த உருக்கமான வேண்டுகோள் என்பது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் கூறியதாவது[4]: “இந்திய தொல்லியல் துறையில், பல்வேறு பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு விளம்பரம் செய்திருந்தது. அதில், ‘கல்வெட்டு ஆய்வாளர்என்ற பிரிவே இல்லை. இதைப் பார்த்து விட்டுத்தான் மூத்த ஆய்வாளர்களும், அறிஞர்களும், ‘கல்வெட்டு பிரிவை காப்பாற்றுங்கள்என்ற பதாகையை ஏந்த வேண்டியிருந்தது.இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மைசூரு, நாக்பூர், லக்னோ, சென்னை ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொல்லியல் துறை அலுவலகங்களில் மொத்தம், 31 கல்வெட்டு ஆய்வாளர்கள் தான் உள்ளனர்.கொஞ்சம் யோசித்து பாருங்கள்”.

தென்னிந்திய கோவில்கள் கல்வெட்டுகள் 39-தொகுதிகள் வெளியிடப் பட்டுள்ளன: ஸ்ரீதரன் கூறியதாவது,இதுவரை இந்தியாவில், 60,000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில், 20,000 கல்வெட்டுகள் தான் படியெடுக்கப்பட்டு, அதன் விபரங்கள் வாசிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான கல்வெட்டுகளை படியெடுத்து வாசிக்க வேண்டும். தமிழகத்திலேயே, 32,000 கோவில்கள் உள்ளன. இதில் எல்லாவற்றிலும் இல்லையென்றாலும், ஆயிரக்கணக்கான கோவில்களில் கல்வெட்டுகள் உள்ளன. அவை காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் சிதைந்து போய் விடும். அதற்கு முன், அவற்றை எல்லாம் கண்டுபிடித்துப் படியெடுக்க வேண்டாமா? இதுவரை, மத்திய தொல்லியல் துறை, தான் கண்டுபிடித்து வாசித்த கல்வெட்டு விபரங்களை, 39 தொகுதிகளாக வெளியிட்டுள்ளது; இன்னும் பல தொகுதிகள் வெளிவர வேண்டியுள்ளது.” 1947லிருந்து இவர்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை.

அப்படியானால், அதற்கு உரிய கல்வெட்டு ஆய்வாளர்கள் தேவை இல்லையா: ஸ்ரீதரன் கூறியதாவது,“அப்படியானால், அதற்கு உரிய கல்வெட்டு ஆய்வாளர்கள் தேவை இல்லையா; அதுவும் கல்வெட்டு ஆய்வு என்பது, மிக முக்கியமான சமுதாய பணி. அது, வழிபாட்டு வரலாற்றை மட்டும் சொல்வதில்லை; சமுதாய வரலாற்றையும் சொல்கிறது.உதாரணமாக, இன்று நாம் சென்னைக்கு அருகே உள்ள ஒரு பகுதியை, திரிசூலம் என்று அழைக்கிறோம். அன்றைக்கு அதன் பெயர், திரிசுரம். திருமுக்கூடலில், ஆதுர சாலை இருந்துள்ளது. நாவிதர்களுக்கான பணிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதையெல்லாம் கல்வெட்டு வாயிலாகவே தெரிந்து கொண்டோம்”……….“கீழடி ஆய்வு பற்றி பேசுகிறோம். அதில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு ஆய்வாளர்களால் தான் வாசிக்க முடியும். பல்வேறு நாணயங்கள் கிடைத்துள்ளன; அதன் முக்கியத்துவத்தையும், காலத்தையும் கணிக்க ஆய்வாளர்கள் தேவை.இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், கல்வெட்டு ஆய்வாளர் பிரிவை வலிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது,” இவ்வாறு ஸ்ரீதரன் கூறினார். “அப்படியானால், அதற்கு உரிய கல்வெட்டு ஆய்வாளர்கள் தேவை இல்லையா…?,” ஆமாம், தேவைதான், பிறகு ஏன் இல்லை?

பணியாளர் மறுசீரமைப்பு (Cadre Restructure) முறைக்கு ஒப்புக் கொண்டதை மறைப்பது: நிதி ஆயோக் பரிந்துரை பேரில், 2013லிருந்தே, இந்த திட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. இருப்பவர்களுக்கு, பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், பணியாளர் மறுசீரமைப்பு முறையை அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தத்தம் சங்கங்கள் மூலமாக ஒப்புக் கொள்வது சாதாரணமான விசயமாக இருந்து வருகிறது. ASI என்ற பெயரை,  ஆஸ்மி – Ashmi—Archaeological Survey and Heritage Management of India என்று மாற்றியமைக்க திட்டமிடப் பட்டது. 2020ல் சமஸ்கிருத மற்றும் திராவிட கல்வெட்டு அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப் பட்டதையும் ஒப்புக் கொண்டனர்[5]. இது பற்றி சுற்றுக்கு விட்டு, கருத்து கேட்டுத் தான் “Assistant Superintending Epigraphists and Assistant Epigraphists (Sanskrit, Dravidian and Arabic and Persian Inscriptions) Group ‘B’ posts, Recruitment Rules, 2020” உருவாக்கப் பட்டன[6]. இவ்வாறு 2013லிருந்து நடந்து வரும் நிகழ்வுகளை முழுவதும் அறிந்து கொள்ளாமல் அல்லது உண்மையினை சொல்லாமல், திடீரென்று இப்பொழுது ஏதோ நடக்கிறது போன்ற மாயையை உருவாக்க முற்படுவது, யாருக்கும் நல்லதல்ல. குறிப்பாக, ஓய்வு பெற்று வசதியாக இருப்பவர்கள், இருப்பவர்களுக்கு பிரச்சினை உருவாக்கும் விதத்தில் ஊடகங்களில் பேட்டி அளிப்பது, அறிக்கைகள் விடுவது முதலியவை தவிர்க்கப் பட வேண்டும் / முதலியவற்றைத் தடுக்க வேண்டும். 28-09-2020 அன்று வெளியிடப் பட்ட விதிமுறைகளையும் எதிர்க்கவில்லை.

© வேதபிரகாஷ்

02-08-2021


[1] தினமலர், கல்வெட்டு ஆய்வாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம், Added : ஜூலை 16, 2021  00:47.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2803154

[3] தினமலர், கல்வெட்டு பிரிவை வலிமைப்படுத்துவது அவசியம்‘,  நமது நிருபர், Updated : ஆக 01, 2021  01:12 |  Added : ஆக 01, 2021  01:11.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2813989

[5] The Notification No. 3-2/2020, the 28th September, 2020 was issued to introduce rules on the posts of Assistant Superintending Epigraphists and Assistant Epigraphists.

[6] https://www.staffnews.in/wp-content/uploads/2020/10/Para-Medical-Worker-Library-Clerk-Chief-Chemist-etc-post-rr.pdf